அடிக்குறிப்பு
b கடைசி நாட்களில் யெகோவாவுக்கு உண்மையாக இருந்து இறந்துபோனவர்கள் முதலில் உயிரோடு எழுப்பப்படலாம். பிறகு, அவர்களுக்கு முன்பு இருந்த தலைமுறை... அதற்கும் முன்பு இருந்த தலைமுறை... என்று இப்படியே பின்வரிசையில் உயிர்த்தெழுதல் நடக்கலாம். இந்த வரிசையில் உயிர்த்தெழுதல் நடந்தது என்றால், ஒவ்வொரு தலைமுறையும் அவர்களுக்கு நன்றாகப் பழக்கமானவர்களை வரவேற்பார்கள். எப்படி இருந்தாலும் சரி, பூமியில் நடக்கும் உயிர்த்தெழுதல் சரியான வரிசையில்தான் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பரலோகத்துக்குப் போகிறவர்களும் ‘அவரவர் வரிசையில்தான்’ உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது.—1 கொ. 14:33; 15:23.