அடிக்குறிப்பு
a யெகோவா நமக்கு அருமையான எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். இந்த நம்பிக்கை நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்குகிறது! இப்போது இருக்கும் பிரச்சினைகளையே யோசித்து யோசித்து நொந்துபோகாமல் இருக்க அது உதவி செய்கிறது. எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்குத் தேவையான பலத்தை அது நமக்குக் கொடுக்கிறது. நம் யோசனைகள் தாறுமாறாகப் போய்விடாதபடி அது நம் மனதைப் பாதுகாக்கிறது. இந்தக் காரணங்களுக்காகத்தான் நம் நம்பிக்கையை நாம் பலமாக வைத்துக்கொள்வது அவசியமாக இருக்கிறது. இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.