அடிக்குறிப்பு
b வார்த்தையின் விளக்கம்: நாம் எல்லாரும் யெகோவாவை ஒற்றுமையாக வணங்கும்போது, நாம் பாதுகாப்பான ஒரு ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கிறோம் என்று சொல்லலாம். இந்தப் பூஞ்சோலையில், பொய் மதத்தின் கலப்படம் இல்லாத ஆன்மீக உணவு நமக்கு ஏராளமாகக் கிடைக்கிறது, திருப்தி தருகிற ஊழிய வேலையும் நிறைய இருக்கிறது. யெகோவாவோடு நெருக்கமான பந்தம் நமக்குக் கிடைக்கிறது. அன்பாகவும் சமாதானமாகவும் பழகுகிற சகோதர சகோதரிகளுடைய நட்பு நமக்குக் கிடைக்கிறது. பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவரை நாம் வணங்க ஆரம்பிக்கும்போதும், அவரைப் போல் நடந்துகொள்ள நம்மால் முடிந்ததை எல்லாம் செய்யும்போதும், இந்த ஆன்மீகப் பூஞ்சோலைக்குள் நாம் வருகிறோம் என்று சொல்லலாம்.