அடிக்குறிப்பு
a நினைவு நாள் சமயத்தில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியும், அவரும் யெகோவாவும் நம்மேல் காட்டிய அன்பைப் பற்றியும் நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்வது யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்ட நம்மைத் தூண்டும். நாம் என்னென்ன விதங்களில் மீட்புவிலைக்கு நன்றி காட்டலாம்... யெகோவாமேலும் இயேசுமேலும் அன்பு காட்டலாம்... என்பதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதுமட்டுமல்ல, நாம் எப்படிச் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டலாம்... எப்படித் தைரியமாக நடந்துகொள்ளலாம்... எப்படிச் சந்தோஷமாகக் கடவுளுக்குச் சேவை செய்யலாம்... என்பதைப் பற்றியும் பார்ப்போம்.