அடிக்குறிப்பு
a யெகோவாவை வணங்கும் நாம் எல்லாருமே தினமும் அவருடைய வார்த்தையைப் படிக்க முயற்சி செய்கிறோம். மற்ற நிறைய பேரும் பைபிளைப் படிக்கிறார்கள். ஆனால், என்ன படிக்கிறார்கள் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. இயேசுவின் காலத்திலும் இப்படிச் சிலர் இருந்தார்கள். கடவுளுடைய வார்த்தையை வாசித்தவர்களிடம் இயேசு என்ன சொன்னார் என்று பார்க்கலாம். இன்னும் நிறைய பிரயோஜனம் கிடைக்கிற விதத்தில் பைபிளை எப்படி வாசிக்கலாம் என்பதற்கு அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.