அடிக்குறிப்பு
a ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே, சரி எது தவறு எது என்று மனிதர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற கருத்தை சாத்தான் பரப்பிவருகிறான். யெகோவாவுடைய சட்டங்களையும் அவருடைய அமைப்புக் கொடுக்கிற வழிநடத்துதல்களையும் நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். இன்று சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற வர்கள், யெகோவாவுடைய கட்டளைகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு நடக்கிறார்கள். அவர்களைப் போல் நடந்துகொள்ளாமல் இருப்பதற்கும், எப்போதும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நம்முடைய தீர்மானத்தில் உறுதியாக இருப்பதற்கும் இந்தக் கட்டுரை உதவும்.