அடிக்குறிப்பு
a யெகோவாவை வணங்கும் இளம் பிள்ளைகளுக்கு நிறைய சவால்கள் வருகின்றன. அந்தச் சமயங்களில் அவர்கள் தைரியமாக இருக்க வேண்டியிருக்கிறது, யெகோவாவுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவதால் அவர்களோடு படிப்பவர்கள் அவர்களைக் கிண்டல் செய்யலாம். கடவுளை வணங்குவதாலும் அவர் சொல்வதுபோல் வாழ்வதாலும்கூட மற்ற பிள்ளைகள் அவர்களைக் கேலி செய்யலாம். ஆனால், தானியேல் தீர்க்கதரிசியைப் போல் தைரியமாகவும் உண்மையாகவும் யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்கள்தான் நிஜமாகவே புத்திசாலிகள். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள்.