அடிக்குறிப்பு
b 1919-ல் உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றி எசேக்கியேல் 37:1-14-கிலும் வெளிப்படுத்துதல் 11:7-12-யிலும் சொல்லியிருக்கிறது. ரொம்பக் காலமாக ஆன்மீக அடிமைத்தனத்தில் இருந்த பிறகு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லாரும் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் உண்மை வணக்கத்தில் ஈடுபடுவதைப் பற்றி எசேக்கியேலில் சொல்லியிருக்கிறது. ஆனால், வெளிப்படுத்துதலில் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனம், கடவுளுடைய மக்களை முன்நின்று வழிநடத்தின அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் அடங்கிய ஒரு சின்ன தொகுதியைப் பற்றித்தான் சொல்கிறது. இவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டதால் கொஞ்ச காலத்துக்குச் செயல்பட முடியாத நிலையில் இருந்தார்கள். இவர்கள் ஆன்மீக அர்த்தத்தில் உயிரோடு வருவதைப் பற்றித்தான் வெளிப்படுத்துதல் சொல்கிறது. 1919-ல் இவர்கள் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ நியமிக்கப்பட்டார்கள்.—மத். 24:45; தூய வணக்கம்—பூமியெங்கும்! புத்தகத்தில், பக்கம் 118-ஐப் பாருங்கள்.