அடிக்குறிப்பு
a தன்னுடைய பெயருக்கு ஒரு களங்கம் வந்தபோது கடவுளுக்கு உண்மையாக இருந்த யோபுகூட தடுமாறினார். இதை யோசியுங்கள்: தன்னுடைய பிள்ளைகளையும் எல்லா சொத்துப்பத்துகளையும் இழந்த சமயத்தில்கூட, “யோபு பாவம் செய்யவில்லை, கடவுள்மேல் எந்தக் குறையும் சொல்லவில்லை.” (யோபு 1:22; 2:10) ஆனால், அவர் ஏதோ தப்பு செய்துவிட்டார் என்று அவருடைய மூன்று நண்பர்கள் அவரைக் குற்றம் சொன்னபோது அவர் ‘ஏதேதோ பேச’ ஆரம்பித்துவிட்டார். யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதைவிட தன்னுடைய பெயருக்காக வாதாட ஆரம்பித்துவிட்டார்.—யோபு 6:3; 13:4, 5; 32:2; 34:5.