அடிக்குறிப்பு
a வார்த்தையின் விளக்கம்: பைபிளில் “பாவம்” என்று சொல்லியிருக்கிற வார்த்தை, பெரும்பாலும் நாம் செய்கிற ஒரு செயலைக் குறிக்கலாம். உதாரணத்துக்கு, திருடுவது, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவது, கொலை செய்வது போன்ற செயல்களைக் குறிக்கலாம். (யாத். 20:13-15; 1 கொ. 6:18) வேறு சில வசனங்களில் சொல்லியிருக்கிற “பாவம்” என்ற வார்த்தை, நமக்குள் இருக்கிற பாவ இயல்பைக் குறிக்கிறது. பிறக்கும்போதே இது நமக்குள் வந்துவிடுகிறது. பாவத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு செயலையும் செய்யவில்லை என்றாலும் நமக்குள் இந்தப் பாவ இயல்பு இருக்கிறது.