-
ஆதியாகமம் 19:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அங்கிருந்து அவர் கீழே பார்த்தபோது, சோதோமும் கொமோராவும் அந்த முழு பிரதேசமும் கோரமாகக் காட்சியளித்தது. சூளையிலிருந்து போகிற புகையைப் போல அடர்த்தியான புகை மேலே போய்க்கொண்டிருந்தது!+ 29 கடவுள் அந்தப் பிரதேசத்திலுள்ள நகரங்களை அழிப்பதற்குமுன், ஆபிரகாமோடு தான் பேசியதை நினைத்துப் பார்த்தார். அதனால், அங்கு வாழ்ந்துவந்த லோத்துவை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.+
-