-
எபிரெயர் 12:18-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அப்படியானால், நீங்கள் அணுகியிருப்பது* தொட்டு உணரக்கூடிய மலையை+ அல்ல; அது தீப்பற்றி எரிந்தது,+ அங்கே கார்மேகம் சூழ்ந்தது, காரிருள் கவ்வியது, புயல்காற்று வீசியது,+ 19 எக்காளம் முழங்கியது,+ குரல் கேட்டது.+ அந்தக் குரலைக் கேட்ட மக்கள் அதற்குமேல் ஒரு வார்த்தைகூட அது தங்களிடம் பேச வேண்டாமென்று மோசேயிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்.+ 20 ஏனென்றால், “ஒரு மிருகம் இந்த மலையைத் தொட்டால்கூட, அது கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்” என்ற கட்டளையைக் கேட்டு அவர்கள் பயந்துபோயிருந்தார்கள்.+ 21 அதோடு மோசேயும்கூட, “நான் பயந்து நடுங்குகிறேன்”+ என்று சொல்லும் அளவுக்கு அந்தக் காட்சி பயங்கரமாக இருந்தது.
-