-
யாத்திராகமம் 36:35, 36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்தார். அதன்மேல் கேருபீன்களின்+ வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்தார்.+ 36 திரைச்சீலையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தால் நான்கு தூண்கள் செய்து, அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்தார். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் அந்தத் தூண்களை நிறுத்தினார்.
-