-
லேவியராகமம் 7:29-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்துகிறவன் அதில் ஒரு பங்கை யெகோவாவுக்கென்று கொண்டுவர வேண்டும்.+ 30 யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலியாக மார்க்கண்டத்தையும்* கொழுப்பையும்+ தன் கையிலேயே கொண்டுவர வேண்டும். அதை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 31 குருவானவர் அதன் கொழுப்பைப் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.+ ஆனால், மார்க்கண்டம் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சொந்தமாகும்.+
-