-
உபாகமம் 24:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது ஒரு கதிர்க்கட்டை அங்கேயே மறந்துவிட்டு வந்திருந்தால், அதை எடுக்க மறுபடியும் போகாதீர்கள். உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அதை விட்டுவிடுங்கள்.+ அப்போதுதான், நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+
-
-
ரூத் 2:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஒருநாள், நகோமியிடம் மோவாபியப் பெண்ணாகிய ரூத், “நான் வயல்வெளிக்குப் போகட்டுமா? யார் எனக்குக் கருணை காட்டுகிறாரோ அவருடைய வயலில் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு+ வரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கு நகோமி, “போய் வா, என் மகளே” என்று சொன்னாள். 3 உடனே அந்த இளம் பெண் அங்கிருந்து போய், அறுவடை செய்கிறவர்களின் பின்னால் கதிர் பொறுக்க ஆரம்பித்தாள். அந்த வயல்நிலம் எலிமெலேக்கின்+ குடும்பத்தைச் சேர்ந்த போவாசின்+ வயல்நிலம் என்பது அவளுக்குத் தெரியவில்லை.
-