-
யாத்திராகமம் 26:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 வேல மரத்தால் செய்யப்பட்டு, தங்கத்தால் தகடு அடிக்கப்பட்ட நான்கு தூண்களில் இந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் இந்தத் தூண்களை நிறுத்த வேண்டும்.
-
-
யாத்திராகமம் 26:37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 திரையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தில் ஐந்து தூண்களைச் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். அவற்றுக்காக, செம்பில் ஐந்து பாதங்களை வார்க்க வேண்டும்” என்றார்.
-
-
யாத்திராகமம் 36:37, 38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்தார்.+ 38 அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்காக ஐந்து தூண்களையும் ஐந்து கொக்கிகளையும் செய்தார். தூண்களின் மேல்பகுதிகளுக்கும் இணைப்புகளுக்கும்* தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் ஐந்து பாதங்களைச் செம்பினால் செய்தார்.
-