-
யாத்திராகமம் 18:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து திறமையான ஆண்களைத் தேர்ந்தெடுத்து 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமித்தார்.
-
-
யோசுவா 22:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அப்போது, குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ கீலேயாத் பிரதேசத்திலுள்ள ரூபன் கோத்திரத்தாரிடமும் காத் கோத்திரத்தாரிடமும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும் இஸ்ரவேலர்கள் அனுப்பினார்கள். 14 இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தந்தைவழிக் குடும்பத் தலைவர் என 10 தலைவர்களை அவரோடு அனுப்பினார்கள். அதாவது, இஸ்ரவேலில் ஆயிரக்கணக்கானோருக்கு* தலைவர்களாக+ இருந்தவர்களை அனுப்பினார்கள்.
-
-
1 நாளாகமம் 27:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 ராஜாவின் படையில் இஸ்ரவேல் வீரர்கள் பல பிரிவுகளாகச் சேவை செய்தார்கள். தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்,+ ராஜாவுக்காக அந்தப் பிரிவுகளைக் கவனித்துக்கொண்ட அதிகாரிகள்+ ஆகியோர் அந்தப் பிரிவுகளில் இருந்தார்கள். வருஷம் முழுக்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரிவினர் சேவை செய்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 பேர் இருந்தார்கள். அந்தப் பிரிவுகள் இவையே:
-