14 எருசலேமில் இருந்த உயர் அதிகாரிகள்,+ மாவீரர்கள், கைத்தொழிலாளிகள், கொல்லர்கள்*+ என எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்; மொத்தம் 10,000 பேரைக் கொண்டுபோனான். பரம ஏழைகளைத் தவிர வேறு யாரையுமே நகரத்தில் விட்டுவைக்கவில்லை.+
15 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனான். அதோடு, பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், திறமையான கைத்தொழிலாளிகளையும் கொண்டுபோனான்.+