-
2 சாமுவேல் 2:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அதனால் அப்னேர் மறுபடியும் அவரிடம், “என்னைத் துரத்திக்கொண்டு வராதே; வந்தால் உன்னை வெட்டி விடுவேன். உன்னைக் கொன்றுவிட்டு, உன் சகோதரன் யோவாப் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்?” என்று கேட்டார். 23 ஆனால், ஆசகேல் அவரை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தார். அதனால், அப்னேர் தன்னுடைய ஈட்டியின் பின்புறத்தால் அவருடைய அடிவயிற்றில் குத்தினார்;+ அந்த ஈட்டி அவருடைய உடலை ஊடுருவி பின்பக்கமாக வந்தது. அவர் அந்த இடத்திலேயே விழுந்து செத்துப்போனார். ஆசகேல் செத்துக் கிடந்த இடத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றார்கள்.
-