14 சலாத்தியேலின் மகனும் யூதாவின் ஆளுநருமான செருபாபேலின்+ மனதையும், யோசதாக்கின் மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவின்+ மனதையும், ஜனங்கள் எல்லாருடைய மனதையும் யெகோவா தூண்டினார்.+ உடனே அவர்கள், தங்களுடைய கடவுளான பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.+