-
உபாகமம் 31:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 மோசே அவர்களிடம், “விடுதலை வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும்,+ கூடாரப் பண்டிகை+ சமயத்தில், 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற இடத்திலே அவர் முன்னிலையில் இஸ்ரவேலர்கள் எல்லாரும் வர வேண்டும்.+ அவர் குறித்திருக்கிற அந்தச் சமயத்தில், அவர்களுடைய காதில் விழும்படி இந்தத் திருச்சட்டத்தை நீங்கள் வாசிக்க வேண்டும்.+ 12 ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் ஒன்றுகூட்ட வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கேட்டு, கற்றுக்கொண்டு, அவருக்குப் பயந்து நடப்பார்கள். இந்தத் திருச்சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்.
-