-
ஏசாயா 63:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அப்போது அவர்கள், அவருடைய ஊழியரான மோசே வாழ்ந்த காலத்தை
நினைத்துப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்:
“தன்னுடைய மந்தையை மேய்ப்பர்களோடு+ கடல் வழியாக அழைத்து வந்தவர்+ எங்கே?
அவருக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தவர்+ எங்கே?
-
அப்போஸ்தலர் 7:35, 36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 இந்த மோசேயிடம்தான், ‘உன்னைத் தலைவனாகவும் நீதிபதியாகவும் நியமித்தது யார்?’+ என்று அந்த மக்கள் கேட்டு, அவரை ஒதுக்கித்தள்ளினார்கள். ஆனால், முட்புதரில் தோன்றிய தேவதூதர் மூலம் கடவுள் அவரைத்தான் தலைவராகவும் விடுவிக்கிறவராகவும் அனுப்பி வைத்தார்.+ 36 மோசேதான் அந்த மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்;+ அந்தத் தேசத்திலும் செங்கடலிலும்+ 40 வருஷங்கள் வனாந்தரத்திலும்+ நிறைய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.+
-
-
-