-
1 சாமுவேல் 25:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 எஜமானே, உங்களைப் பிடித்துக் கொன்றுபோட யாராவது வந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய உயிரைத் தன்னுடைய பொக்கிஷப் பையில் வைத்துப் பாதுகாப்பார். ஆனால் எதிரிகளின் உயிரை, கவணில் வைத்து எறியும் கல்போல் எறிந்துவிடுவார்.
-
-
1 சாமுவேல் 26:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ஆனால் தாவீது அபிசாயிடம், “அவரை ஒன்றும் செய்துவிடாதே! யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல்*+ கை வைத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து யாராவது தப்பிக்க முடியுமா?”+ என்று கேட்டார். 10 அதோடு, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* யெகோவாவே அவரைப் பழிவாங்குவார்.+ இல்லையென்றால், அவர் இயற்கையாகவோ போரிலோ சாவார்,+ அந்த நாள் கண்டிப்பாக வரும்.+
-