-
யாத்திராகமம் 20:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ 5 அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.+ தகப்பன்கள் என்னை வெறுத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால் அவர்களுடைய பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிப்பேன்.
-
-
ஆபகூக் 2:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?
அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்?
உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்
அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?
அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+
19 ஒரு மரத்துண்டைப் பார்த்து, “கடவுளே, கண்திறக்க மாட்டாயா?” என்று கேட்கிறவனுக்கும்,
பேச முடியாத கல்லைப் பார்த்து, “இறைவா, கண் திறந்து எங்களுக்கு நல்ல வழி காட்டு” என்று சொல்கிறவனுக்கும் கேடுதான் வரும்!
-