உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 20:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ 5 அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.+ தகப்பன்கள் என்னை வெறுத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால் அவர்களுடைய பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிப்பேன்.

  • லேவியராகமம் 26:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 பின்பு அவர், “‘ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் உண்டாக்கக் கூடாது.+ செதுக்கப்பட்ட சிலைகளையோ+ பூஜைத் தூண்களையோ வைத்து வணங்கக் கூடாது. உங்கள் தேசத்தில் கற்சிலைகளை+ வைத்து அவற்றின் முன்னால் தலைவணங்கக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

  • ஆபகூக் 2:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?

      அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்?

      உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்

      அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?

      அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+

      19 ஒரு மரத்துண்டைப் பார்த்து, “கடவுளே, கண்திறக்க மாட்டாயா?” என்று கேட்கிறவனுக்கும்,

      பேச முடியாத கல்லைப் பார்த்து, “இறைவா, கண் திறந்து எங்களுக்கு நல்ல வழி காட்டு” என்று சொல்கிறவனுக்கும் கேடுதான் வரும்!

      அவை தங்கத்தாலும் வெள்ளியாலும் முலாம் பூசப்பட்டிருக்கின்றன.+

      அவற்றுக்கு உயிர்மூச்சே இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்