37 ‘அக்கிரமக்காரர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்’+ என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனம் என்னில் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பற்றி எழுதப்பட்டதெல்லாம் நிறைவேறி வருகிறது”+ என்று சொன்னார்.
32 குற்றவாளிகளான வேறு இரண்டு பேரும் மரண தண்டனைக்காக அவரோடு கொண்டுபோகப்பட்டார்கள்.+33 மண்டையோடு என்றழைக்கப்பட்ட இடத்துக்கு+ வந்ததும் அங்கே அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+