-
மத்தேயு 11:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அதற்கு இயேசு அந்தச் சீஷர்களிடம், “நீங்கள் கேட்பதையும் பார்ப்பதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்:+ 5 பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள்,+ நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள்,+ காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள், இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி+ சொல்லப்படுகிறது;
-
-
அப்போஸ்தலர் 10:37, 38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 ஞானஸ்நானத்தைப் பற்றி யோவான் பிரசங்கித்த பின்பு கலிலேயா+ தொடங்கி யூதேயா முழுவதும் என்ன விஷயம் பேசப்பட்டதென்று உங்களுக்கே தெரியும். 38 நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக் கடவுள் தன்னுடைய சக்தியாலும்+ வல்லமையாலும் அபிஷேகம் செய்ததையும், கடவுள் அவரோடு இருந்ததால்+ அவர் தேசம் முழுவதும் போய் நன்மைகள் செய்ததையும், பிசாசின் கொடுமைக்கு ஆளான+ எல்லாரையும் குணப்படுத்தியதையும் பற்றிப் பேசப்பட்டதெல்லாம் உங்களுக்கே தெரியும்.
-