-
எரேமியா 50:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
50 கல்தேயர்களின் தேசமான பாபிலோனைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னது இதுதான்:
2 “இதை எல்லா தேசங்களிலும் சொல்லுங்கள்!
கொடியை* ஏற்றி, அறிவிப்பு செய்யுங்கள்!
எதையும் மறைக்காதீர்கள்!
இப்படிச் சொல்லுங்கள்: ‘பாபிலோன் கைப்பற்றப்பட்டது!+
பேல் அவமானம் அடைந்துவிட்டது!+
மெரொதாக்கைத் திகில் கவ்விக்கொண்டது!
பாபிலோனின் சிலைகளுக்கு அவமானம் வந்துவிட்டது!
அவளுடைய அருவருப்பான* உருவச்சிலைகள் மிரண்டுபோய்விட்டன!’
3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+
அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.
அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது.
மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.
தேசமே வெறிச்சோடிப்போனது.”
-