உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 29:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அந்த நாளில், காது கேட்காதவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் வார்த்தைகள் கேட்கும்.

      பார்வை இல்லாதவர்களின் கண்கள் இருளைவிட்டு நீங்கி பார்வை அடையும்.+

  • எரேமியா 6:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “நான் யாரிடம் பேசுவது? யாரை எச்சரிப்பது?

      நான் சொல்வதை யார் கேட்பார்கள்?

      அவர்களுடைய காதுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன; அவர்களால் எப்படிக் கவனித்துக் கேட்க முடியும்?+

      யெகோவாவின் வார்த்தையை அவர்கள் கேலி செய்கிறார்கள்.+

      அதைக் கேட்க அவர்கள் விரும்புவதே இல்லை.

  • மாற்கு 7:32-35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 இங்கே,* காது கேட்காதவனும், பேச்சுக் குறைபாடு உள்ளவனுமான ஒருவனை+ அவரிடம் கொண்டுவந்து அவன்மேல் கைகளை வைக்கும்படி சிலர் கெஞ்சிக் கேட்டார்கள். 33 அப்போது அவர், கூட்டத்தாரைவிட்டு அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்து, உமிழ்ந்து, பின்பு அவனுடைய நாக்கைத் தொட்டார்.+ 34 அதன் பின்பு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, “எப்பத்தா” என்று சொன்னார்; அதற்கு “திறக்கப்படு” என்று அர்த்தம். 35 அப்போது அவனுடைய காதுகள் திறந்தன,+ அவனுடைய பேச்சுக் குறைபாடும் சரியாகி அவன் தெளிவாகப் பேச ஆரம்பித்தான்.

  • லூக்கா 7:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதன் பின்பு அவர் அந்தச் சீஷர்களிடம், “நீங்கள் பார்த்ததையும் கேட்டதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்: பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள்,+ நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள்,+ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்