-
2 ராஜாக்கள் 19:29-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 எசேக்கியா, உனக்கு நான் தரும் அடையாளம் இதுதான்: இந்த வருஷம் தானாக விளைந்ததை* சாப்பிடுவீர்கள்; அடுத்த வருஷம் அதிலிருந்து முளைக்கிற பயிர்களைச் சாப்பிடுவீர்கள்;+ ஆனால், அதற்கடுத்த வருஷம் நீங்களே விதைத்து அறுவடை செய்வீர்கள், திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.+ 30 யூதா மக்களில் மீதியிருக்கிற ஆட்கள்+ மரம்போல் வேரூன்றி நிற்பார்கள், காய்த்துக் குலுங்குவார்கள். 31 மீதியிருக்கிற மக்கள் எருசலேமிலிருந்தும், உயிர்தப்புகிற ஆட்கள் சீயோன் மலையிலிருந்தும் புறப்பட்டுப் போவார்கள். பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.+
-