-
2 ராஜாக்கள் 20:8-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 எசேக்கியா ஏசாயாவிடம், “யெகோவா என்னைக் குணமாக்குவார், மூன்றாம் நாளில் நான் யெகோவாவின் ஆலயத்துக்குப் போவேன் என்று சொன்னீர்களே, அதற்கு என்ன அடையாளம்?”+ என்று கேட்டிருந்தார். 9 அதற்கு ஏசாயா, “யெகோவா தான் சொன்னதை நிறைவேற்றுவார் என்பதற்கு யெகோவா தரும் அடையாளம் இதுதான்: படிக்கட்டில்* விழும் நிழல் பத்துப் படிகள் முன்னால் போக வேண்டுமா, பத்துப் படிகள் பின்னால் போக வேண்டுமா?”+ என்று கேட்டார். 10 அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் படிகள் முன்னால் போவது சுலபம், பின்னால் போவதுதான் கஷ்டம்” என்று சொன்னார். 11 அப்போது, ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவிடம் மன்றாடினார். அப்போது ஆகாசின் படிக்கட்டில் விழுந்திருந்த நிழல் பத்துப் படிகள் பின்னால் போகும்படி கடவுள் செய்தார்.+
-