10 மிஸ்பாவில்+ மீதியாக இருந்த ஜனங்களையெல்லாம் இஸ்மவேல் சிறைபிடித்துக்கொண்டு போனான். காவலாளிகளின் தலைவனான நேபுசராதான், அகிக்காமின் மகனான கெதலியாவின்+ பொறுப்பில் விட்டிருந்த ராஜாவின் மகள்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு அம்மோனியர்களின்+ தேசத்துக்குப் புறப்பட்டான்.