25 பின்பு, அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது, கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மவேலர்களின்+ கூட்டத்தைப் பார்த்தார்கள். மலைரோஜா பிசினையும் பரிமளத் தைலத்தையும் பிசின் பட்டையையும்+ ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு அவர்கள் எகிப்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.