33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.
64 பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற எல்லா தேசங்களிலும் யெகோவா உங்களைச் சிதறிப்போக வைப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்ட பொய் தெய்வங்களைக் கும்பிடுவீர்கள்; உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்கள் அவை.+
14 அதனால் நான் ஒரு புயல்காற்றை அனுப்பி, முன்பின் தெரியாத தேசங்களுக்கெல்லாம் அவர்களைச் சிதறிப்போக வைத்தேன்.+ அவர்களுடைய தேசம், யாரும் வந்து போக முடியாதளவுக்குப் பாழாய்ப்போனது.+ அவர்களால் அந்த அழகான தேசம் கோரமாக ஆகிவிட்டது.’”