-
எரேமியா 23:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 “என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது! எனக்கு ஒரு கனவு வந்தது!’+ என்று சொல்வதைக் கேட்டேன். 26 எவ்வளவு காலம்தான் இந்தத் தீர்க்கதரிசிகள் இப்படிப் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்? இவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்.+
-
-
எரேமியா 29:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அவருடைய பெயரில் பொய்த் தீர்க்கதரிசனங்கள் சொல்கிற கொலாயாவின் மகன் ஆகாபைப் பற்றியும் மாசெயாவின் மகன் சிதேக்கியாவைப் பற்றியும் இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:+ ‘நான் அவர்களை பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகவே கொலை செய்வான்.
-