31 இன்றைய தலைமுறையினரே, யெகோவாவின் வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
நான் இஸ்ரவேலுக்கு ஒரு வனாந்தரம்போல் ஆகிவிட்டேனா?
பயங்கரமான இருட்டில் கிடக்கும் தேசம்போல் ஆகிவிட்டேனா?
என் ஜனங்கள் என்னிடம், ‘எங்கள் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருக்கிறோம்,
உங்களிடம் இனி வரவே மாட்டோம்’+ என்று ஏன் சொல்கிறார்கள்?