-
2 ராஜாக்கள் 24:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இப்படி, யோயாக்கீனையும்+ அவருடைய அம்மாவையும் மனைவிகளையும் அரண்மனை அதிகாரிகளையும் பிரபலமான ஆண்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 16 அதோடு, 7,000 போர்வீரர்களையும், 1,000 கைத்தொழிலாளிகளையும் கொல்லர்களையும்* சிறைபிடித்துக்கொண்டு போனான்; போர்ப் பயிற்சி பெற்ற அந்த மாவீரர்கள் எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்.
-
-
எரேமியா 29:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த பெரியோர்களுக்கும்* குருமார்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் எரேமியா தீர்க்கதரிசி எருசலேமிலிருந்து ஒரு கடிதம் எழுதினார். 2 எகொனியா ராஜாவும்,+ அவருடைய தாயும்,*+ அரண்மனை அதிகாரிகளும், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களும், கைத்தொழிலாளிகளும், கொல்லர்களும்* சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு+
-