16 இதையெல்லாம் நினைத்து நான் கதறுகிறேன்;+ என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.
எனக்கு ஆறுதல் சொல்லவோ புதுத்தெம்பு தரவோ யாரும் இல்லை, எல்லாரும் தூரமாகப் போய்விட்டார்கள்.
எதிரி ஜெயித்துவிட்டதால் என் மகன்களுடைய வாழ்க்கையே பாழாய்ப் போய்விட்டது.