-
எரேமியா 52:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான் எருசலேமுக்குள் வந்தான்.+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் சேவகன். 13 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும் எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும் அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பெரிய மனிதர்களுடைய வீடுகளைக்கூட ஒன்றுவிடாமல் எரித்துப்போட்டான்.
-
-
எசேக்கியேல் 24:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 ‘இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் என்னுடைய ஆலயத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறீர்கள். அதன்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறீர்கள். ஆனால், நான் அதைத் தீட்டுப்படுத்தப்போகிறேன்.+ உங்கள் தேசத்தில் நீங்கள் விட்டுவிட்டு வந்த உங்கள் பிள்ளைகள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+
-