8 அவளுக்குத் தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் தந்தேன்.
வெள்ளியையும் தங்கத்தையும் அள்ளிக் கொடுத்தேன்.
இதை உணராமல் பாகாலின் வணக்கத்துக்கு அவற்றைப் பயன்படுத்தினாள்.+
9 ‘இனி எதையும் கொடுக்க மாட்டேன்.
என் தானியத்தை அதன் அறுவடைக் காலத்திலும்,
என்னுடைய புதிய திராட்சமதுவை அதன் பருவகாலத்திலும் எடுத்துக்கொள்வேன்.+
அவள் உடலை மறைக்க நான் கொடுத்த கம்பளி, நாரிழை உடைகளைப் பிடுங்கிக்கொள்வேன்.