-
யாத்திராகமம் 12:21-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 உடனடியாக, மோசே இஸ்ரவேலின் பெரியோர்கள்*+ எல்லாரையும் கூப்பிட்டு, “உங்கள் குடும்பத்துக்காக நீங்கள் ஒரு ஆட்டுக்குட்டியை* தேர்ந்தெடுத்து, அதை வெட்டி, பஸ்கா பலி செலுத்துங்கள். 22 பின்பு, பாத்திரத்திலுள்ள இரத்தத்தில் ஒரு மருவுக்கொத்தை முக்கியெடுத்து, வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களின் மேலும் அவற்றின் மேற்சட்டத்தின் மேலும் அதைத் தெளியுங்கள். காலைவரை யாருமே வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது. 23 எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக யெகோவா வரும்போது, வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களின் மேலும் அவற்றின் மேற்சட்டத்தின் மேலும் இரத்தத்தைப் பார்த்தால், அந்த வீட்டைவிட்டுக் கடந்துபோய்விடுவார். உங்களுடைய வீடுகளில் சாவு விழுவதற்கு யெகோவா விடமாட்டார்.+
-