-
யோசுவா 19:47, 48பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
47 தாணின் பகுதி அவர்களுக்கு ரொம்பவே சின்னதாக இருந்தது.+ அதனால் அவர்கள் போய் லேசேமைத்+ தாக்கி, அதைக் கைப்பற்றி, அங்கிருந்தவர்களை வாளால் கொன்றார்கள். அந்த நகரத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அங்கே குடியேறினார்கள். அதோடு, தங்களுடைய மூதாதை தாணின் ஞாபகமாக அதன் பெயரை தாண் என்று மாற்றினார்கள்.+ 48 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே தாண் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து.
-
-
1 ராஜாக்கள் 4:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 சாலொமோனின் காலமெல்லாம், தாண்முதல் பெயெர்-செபாவரை இருந்த யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் அவரவருடைய திராட்சைக் கொடியின் நிழலிலும் அவரவருடைய அத்தி மரத்தின் நிழலிலும் பாதுகாப்பாகக் குடியிருந்தார்கள்.
-
-
1 ராஜாக்கள் 12:28, 29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 அதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்.+ பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். இதோ! உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்”+ என்று சொன்னார். 29 அவற்றில் ஒன்றை பெத்தேலிலும்+ மற்றொன்றை தாணிலும்+ வைத்தார்.
-