-
2 ராஜாக்கள் 17:25, 26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 அவர்கள் அங்கே குடியேறிய சமயத்தில் யெகோவாவை வணங்கவில்லை. அதனால், யெகோவா அவர்களுடைய ஊருக்குள் சிங்கங்களை அனுப்பினார்,+ அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன. 26 அப்போது, அசீரிய ராஜாவிடம், “வேறு தேசங்களிலிருந்து சிறைபிடித்துவந்து சமாரியா நகரங்களில் நீங்கள் குடியேற்றிய மக்களுக்கு அந்தத் தேசத்து கடவுளைப் பற்றியோ மதத்தை* பற்றியோ தெரியவில்லை. அதனால், அவர் சிங்கங்களை ஊருக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவை அந்த மக்களைக் கொன்றுபோடுகின்றன. அந்தத் தேசத்து கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ அவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை” என்று சொல்லப்பட்டது.
-