உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 25:12, 13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+ 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+

  • எசேக்கியேல் 35:10, 11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 ‘இந்த இரண்டு தேசங்களும் எனக்குச் சொந்தமாகும், இரண்டையுமே நாங்கள் கைப்பற்றுவோம்’+ என்று நீ சொன்னாய். யெகோவா அங்கே இருந்தும் நீ அப்படிச் சொன்னாய். 11 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீ அவர்கள்மேல் பொறாமைப்பட்டு எந்தளவுக்கு வெறுப்பையும் கோபத்தையும் காட்டினாயோ அந்தளவுக்கு நான் உனக்குப் பதிலடி கொடுப்பேன்.+ உன்னைத் தண்டிக்கும்போது, நான் யார் என்று அவர்களுக்குக் காட்டுவேன்.

  • ஆமோஸ் 1:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 யெகோவா இப்படிச் சொல்கிறார்:

      ‘ஏதோம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      வாளை எடுத்துக்கொண்டு சொந்த சகோதரனையே அவன் துரத்தினான்.+

      இரக்கம் காட்ட மறுத்துவிட்டான்.

      இன்னமும் வெறித்தனமாகத் தாக்கிக்கொண்டே இருக்கிறான்.

      பயங்கர கோபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்