எரேமியா
48 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா மோவாபைப்+ பற்றிச் சொல்வது இதுதான்:
“நேபோவின்+ கதி அவ்வளவுதான்! அவள் அழிந்துவிட்டாள்!
கீரியாத்தாயீமுக்கு+ அவமானம்! அவள் கைப்பற்றப்பட்டாள்!
பாதுகாப்பான கோட்டைக்கு அவமானம்! அது இடிக்கப்பட்டது!+
2 இனி யாரும் மோவாபைப் புகழ மாட்டார்கள்.
அவளைக் கவிழ்ப்பதற்காக எதிரிகள் எஸ்போனில்+ திட்டம் தீட்டியிருக்கிறார்கள்:
‘அந்தத் தேசத்துக்கு ஒரு முடிவுகட்டலாம், வாருங்கள்’ என்று சொல்கிறார்கள்.
மத்மேனே, நீயும் அமைதியாகிவிடு!
ஏனென்றால், வாள் உன்னைக் குறிவைத்திருக்கிறது.
4 மோவாப் நொறுக்கப்பட்டாள்.
அவளுடைய சிறுபிள்ளைகள் கதறுகிறார்கள்.
5 அவர்கள் அழுதுகொண்டே லூகித்துக்கு ஏறிப்போகிறார்கள்.
ஒரோனாயீமிலிருந்து இறங்கி வரும்போது, அழிவைக் கண்டு அழுகிறவர்களின் சத்தத்தைக் கேட்கிறார்கள்.+
6 உங்கள் உயிருக்கு ஆபத்து! தப்பித்து ஓடுங்கள்!
வனாந்தரத்திலுள்ள ஆபால் மரத்தைப் போல ஆகிவிடுங்கள்.
7 உன்னுடைய சாதனைகளையும் சொத்துகளையும் நீ நம்பியிருக்கிறாய்.
அதனால், நீயும் கைப்பற்றப்படுவாய்.
கேமோஷ்+ தெய்வம் சிறைபிடிக்கப்படும்.
அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.
பள்ளத்தாக்கு அழிந்துபோகும்.
சமவெளி சின்னாபின்னமாகும்.
யெகோவா சொன்னபடியே எல்லாம் நடக்கும்.
9 மோவாபின் நகரங்களுக்குக் கோரமான முடிவு வரும்.
அங்கு இனி மனுஷ நடமாட்டமே இருக்காது.+
நகரங்கள் அழியும்போது ஜனங்கள் தப்பித்து ஓடுவார்கள்.
அதனால், மோவாபின் ஜனங்களுக்குத் திசைகாட்ட கல்தூணை வையுங்கள்.
10 யெகோவா கொடுத்த வேலையை ஏனோதானோவென்று செய்கிறவன் சபிக்கப்படுவான்!
இரத்தம் சிந்துவதற்காக வாளை எடுக்காதவனும் சபிக்கப்படுவான்!
11 இளவயதிலிருந்தே மோவாபியர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.
கசடு படிந்துவிட்ட தெளிந்த திராட்சமதுவைப் போல இருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு ஜாடியிலிருந்து இன்னொரு ஜாடிக்கு மாற்றப்பட்டதே இல்லை.
அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதே இல்லை.
அதனால்தான் ருசி கூடாமலும்,
வாசனை மாறாமலும் இருக்கிறார்கள்.
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘காலம் வருகிறது. அப்போது, அவர்களைக் கவிழ்ப்பதற்காக நான் ஆட்களை அனுப்புவேன். அந்த ஆட்கள் அவர்களைக் கவிழ்ப்பார்கள். ஜாடிகளில் இருப்பதையெல்லாம் கீழே கொட்டுவார்கள். பின்பு, அந்தப் பெரிய ஜாடிகளை உடைத்து நொறுக்குவார்கள். 13 இஸ்ரவேலர்கள் தாங்கள் நம்பியிருந்த பெத்தேலை நினைத்து எப்படி வெட்கப்படுகிறார்களோ அப்படியே மோவாபியர்கள் கேமோஷை நினைத்து வெட்கப்படுவார்கள்.+
14 “நாங்கள் மாவீரர்கள்! நாங்கள் போருக்குத் தயார்!”+ என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு என்ன துணிச்சல்!’
15 பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ள ராஜா சொல்வது இதுதான்:+
‘மோவாப் அழிக்கப்பட்டாள்.
அவளுடைய நகரங்கள் கைப்பற்றப்பட்டன.+
அவளுடைய திறமையான வாலிபர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.’+
17 அவர்களைச் சுற்றியிருக்கிற ஜனங்களே,
அவர்களுடைய பேரையும் புகழையும் பற்றித் தெரிந்தவர்களே,
அவர்களுக்காக அனுதாபப்படுங்கள்.
‘பலமான செங்கோல் முறிந்துபோனதே! அழகான கோல் உடைக்கப்பட்டதே!’ என்று சொல்லுங்கள்.
கௌரவமான இடத்தைவிட்டு இறங்குங்கள்.
தாகத்தோடு* கீழே உட்காருங்கள்.
மோவாபை அழிக்க எதிரி வந்துவிட்டான்.
அவளுடைய கோட்டைகளை அவன் தரைமட்டமாக்குவான்.+
19 ஆரோவேர்+ ஜனங்களே, தெரு ஓரமாக நின்று பாருங்கள்.
தப்பிவருகிற ஆண்களிடமும் பெண்களிடமும், ‘என்ன நடந்தது?’ என்று கேளுங்கள்.
20 மோவாபுக்கு ஒரே அவமானம்! எங்கு பார்த்தாலும் திகில்!
ஓலமிடுங்கள்! ஒப்பாரி வையுங்கள்!
மோவாப் அழிந்துவிட்டாள் என்று அர்னோனில்+ அறிவியுங்கள்.
21 சமவெளிக்குத்+ தண்டனைத் தீர்ப்பு கிடைத்துவிட்டது. ஓலோன், யாகாஸ்,+ மேபாகாத்,+ 22 தீபோன்,+ நேபோ,+ பெத்-திப்லாத்தாயீம், 23 கீரியாத்தாயீம்,+ பெத்-கமூல், பெத்-மெயோன்,+ 24 கீரியோத்,+ போஸ்றா நகரங்களுக்கும், பக்கத்திலும் தூரத்திலும் இருக்கிற மோவாப் நகரங்கள் எல்லாவற்றுக்கும் தண்டனைத் தீர்ப்பு கிடைத்துவிட்டது.
25 ‘மோவாபின் கொம்பு ஒடிக்கப்பட்டது!
அவனுடைய கை முறிக்கப்பட்டது!’ என்று யெகோவா சொல்கிறார்.
26 ‘மோவாப் யெகோவாவுக்கு எதிராகப் பெருமையடிக்கிறான்.+
அதனால் போதை ஏறுமளவுக்கு அவனைக் குடிக்க வையுங்கள்.+
அவன் வாந்தி எடுத்து அதிலேயே புரளட்டும்.
எல்லாரும் அவனைப் பார்த்துக் கேலி செய்யட்டும்.
27 நீ இஸ்ரவேலைக் கேலி செய்யவில்லையா?+
அவன் என்ன திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவனா?
ஏன் அவனைப் பார்த்துக் கிண்டலடித்து, தலையை ஆட்டுகிறாய்?
28 மோவாப் ஜனங்களே, நகரங்களை விட்டுவிட்டுப் பாறைகளுக்கு நடுவில் போய் வாழுங்கள்.
பள்ளத்தாக்கின் பாறை இடுக்குகளில் கூடு கட்டுகிற புறாவைப் போல் வாழுங்கள்.’”
29 “மோவாப் பெருமைபிடித்து அலைகிறான்.
அவனுடைய கர்வத்தையும், ஆணவத்தையும், அகம்பாவத்தையும், அகங்காரத்தையும்+ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.”
30 “யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனுடைய கோபவெறியைப் பற்றி எனக்குத் தெரியும்.
ஆனால் அவனுடைய பெருமைப் பேச்செல்லாம் வெற்றுப் பேச்சாகிவிடும்.
அவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்.
31 மோவாபைப் பார்த்து நான் ஒப்பாரி வைப்பேன்.
மோவாப் நகரங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கதறி அழுவேன்.
கீர்-ஆரேஸ்+ ஜனங்களுக்காகப் புலம்புவேன்.
உன்னுடைய கிளைகள் கடலைக் கடந்திருக்கின்றன.
கடல் வரையும் யாசேர் வரையும் எட்டியிருக்கின்றன.
உன்னுடைய கோடைக் காலப் பழங்களையும் திராட்சைப் பழங்களையும்
நாசமாக்க எதிரி வந்துவிட்டான்.+
ஆலைகளில் இனி திராட்சமது வழிந்தோடாது.
யாரும் சந்தோஷமாகப் பாடிக்கொண்டு திராட்சைப் பழங்களை மிதிக்க மாட்டார்கள்.
அங்கே அலறல் சத்தம்தான் கேட்கும்.’”+
34 “‘எஸ்போனில்+ ஜனங்கள் கதறுகிற சத்தம்
எலெயாலே+ வரைக்கும், யாகாஸ்+ வரைக்கும் கேட்கும்.
சோவாரின் கதறல் ஒரோனாயீம்+ வரையும் எக்லாத்து-செலிசியா வரையும் கேட்கும்.
நிம்ரீமின் தண்ணீர்கூட வற்றிப்போகும்.+
35 ஆராதனை மேடுகளுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து,
தன்னுடைய தெய்வத்துக்குப் பலிகள் செலுத்துகிற எவனும்
இனி மோவாபில் இருக்க மாட்டான்’ என்று யெகோவா சொல்கிறார்.
36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்து
என் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+
மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.
38 ‘மோவாபில் இருக்கிற வீடுகளின் மொட்டைமாடிகளிலும்,
பொது சதுக்கங்களிலும் ஒரே ஒப்பாரிச் சத்தம்!
வேண்டாத ஜாடியை நொறுக்குவது போல
நான் மோவாபை நொறுக்கிவிட்டேன்’ என்று யெகோவா சொல்கிறார்.
39 ‘மோவாப் எப்படி நடுங்குகிறாள்! எப்படி ஓலமிடுகிறாள்!
அவமானத்தோடு எப்படி ஓட்டம்பிடித்திருக்கிறாள்!
எல்லாரும் அவளைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள்.
சுற்றியிருக்கிற எல்லாரும் அவளுடைய நிலைமையைப் பார்த்துக் கதிகலங்குகிறார்கள்.’”
40 “யெகோவா சொல்வது இதுதான்:
‘இதோ, கீழே பாய்ந்து வரும் கழுகைப் போல,+
ஒருவன் மோவாபைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவான்.+
41 அவளுடைய ஊர்கள் கைப்பற்றப்படும்.
அவளுடைய கோட்டைகள் பிடிக்கப்படும்.
குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போல
அந்த நாளில் மோவாபின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.’”
43 மோவாப் ஜனங்களே, திகிலும் படுகுழியும் கண்ணியும்தான்
உங்கள் முன்னால் இருக்கிறது’ என்று யெகோவா சொல்கிறார்.
44 ‘திகிலுக்குப் பயந்து ஓடுகிறவர்கள் படுகுழியில் விழுவார்கள்.
படுகுழியிலிருந்து வெளியே வருகிறவர்கள் கண்ணியில் சிக்குவார்கள்.’
‘ஏனென்றால், நான் மோவாபைத் தண்டிக்கப்போகிற வருஷம் வந்துவிட்டது’ என்று யெகோவா சொல்கிறார்.
45 ‘தப்பித்து ஓடுகிறவர்கள் எதுவும் செய்ய முடியாமல் எஸ்போனின் நிழலில் நிற்கிறார்கள்.
எஸ்போனிலிருந்து நெருப்பு வரும்.
சீகோனிலிருந்து+ தீ ஜுவாலை வரும்.
அது மோவாபின் நெற்றியைச் சுட்டெரிக்கும்.
வெறிபிடித்த வீரர்களின் மண்டையோட்டைப் பொசுக்கும்.’+
46 ‘மோவாபே, உன் கதி அவ்வளவுதான்!
கேமோஷை+ வணங்கிய ஜனங்கள் ஒழிந்துபோனார்கள்.
உன்னுடைய மகன்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
உன்னுடைய மகள்களும் சிறைபிடிக்கப்பட்டார்கள்.+
47 ஆனால் கடைசி நாட்களில், மோவாபிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.
மோவாபுக்குச் சொல்லப்படும் தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முடிகிறது’+ என்று யெகோவா சொல்கிறார்.”