யோபு
22 அதற்கு தேமானியனான எலிப்பாஸ்,+
2 “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?
ஒருவன் விவேகமாக* இருப்பதால் அவருக்கு என்ன பயன்?+
3 நீ நீதிமானாக இருப்பதைப் பார்த்து சர்வவல்லமையுள்ளவர் சந்தோஷப்படுகிறாரா?
நீ உத்தமமாக இருப்பதால் அவருக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா?+
4 கடவுள் ஏன் உனக்குக் கஷ்டம் கொடுத்தார் என்று நினைக்கிறாய்?
அவருக்குப் பயந்து நடப்பதாலா உனக்குத் தண்டனை கொடுத்தார்?
8 உன்னைப் போன்ற செல்வாக்குள்ள ஆட்கள் நிலங்களைப் பறித்துக்கொண்டார்கள்.+
அப்படிப்பட்டவர்கள்தான் அங்கே குடியிருக்கிறார்கள்.
10 அதனால்தான் சுற்றிவர ஆபத்துகளில்* சிக்கியிருக்கிறாய்.+
எதிர்பாராத சம்பவங்களால் ஆடிப்போயிருக்கிறாய்.
11 அதனால்தான் பயங்கரமான இருட்டுக்குள் கண் தெரியாமல் கிடக்கிறாய்.
வெள்ளத்தில் தத்தளிக்கிறாய்.
12 நட்சத்திரங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதென்று பார்.
கடவுள் அதைவிட உயரத்தில்தானே இருக்கிறார்?
13 ஆனால் நீ, ‘கடவுளுக்கு என்ன தெரியும்?
இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து அவரால் தீர்ப்பு சொல்ல முடியுமா?’ என்று கேட்கிறாய்.
15 முன்பு வாழ்ந்த கெட்டவர்களை நீ பின்பற்றுவாயா?
அவர்கள் போன பாதையில் நீயும் போவாயா?
16 வாழ வேண்டிய காலத்தில் அவர்கள் அழிந்துபோனார்களே.
வெள்ளம் அடித்துக்கொண்டு போவதுபோல் அடித்துக்கொண்டு போகப்பட்டார்களே.+
17 அவர்கள் உண்மைக் கடவுளை நினைக்கவே இல்லை.
‘சர்வவல்லமையுள்ளவர் எங்களுக்கு என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்டார்கள்.
18 ஆனால், அவர்களுடைய வீட்டை நல்ல பொருள்களால் நிரப்பியது அவர்தான்.
(அப்படிப்பட்ட கெட்ட எண்ணம் எனக்கு இல்லவே இல்லை.)
19 நீதிமான்கள் அவர்களுடைய அழிவைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள்.
நேர்மையானவர்கள் அதைப் பார்த்து சிரிப்பார்கள்.
20 ‘நம் எதிரிகள் அழிந்துபோனார்கள்.
அவர்கள் விட்டுவிட்டுப் போனதெல்லாம் நெருப்பில் அழிக்கப்படும்’ என்று சொல்வார்கள்.
21 கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள், அப்போது நிம்மதியாக இருப்பாய்.
நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பாய்.
23 சர்வவல்லமையுள்ளவரின் பேச்சைக் கேள்; அப்போது பழைய நிலைமைக்கு வந்துவிடுவாய்.+
அநியாயம் செய்வதை விட்டுவிடு.
24 நீ சேர்த்து வைத்திருக்கிற தங்கக்கட்டிகளைத் தூக்கியெறி.
ஓப்பீரின்* தங்கத்தைப்+ பள்ளத்தாக்கிலே வீசிவிடு.
25 அப்போது, சர்வவல்லமையுள்ளவர் உனக்குத் தங்கக்கட்டிபோல் இருப்பார்.
விலைமதிப்புள்ள வெள்ளி போலவும் இருப்பார்.
27 அவரிடம் வேண்டிக்கொள்வாய், அவர் அதைக் கேட்பார்.
நீ உன்னுடைய நேர்த்திக்கடன்களைச் செலுத்துவாய்.
28 நீ நினைப்பதெல்லாம் நடக்கும்.
உன் வாழ்க்கை பிரகாசமாகும்.
29 அகம்பாவத்துடன் பேசினால் உனக்கு அவமானம்தான் வரும்.
தாழ்மையுள்ள ஆட்களைத்தான் அவர் பாதுகாப்பார்.
30 அப்பாவிகளை அவர் விடுவிப்பார்.
உன் கைகள் சுத்தமாக இருந்தால் நிச்சயம் உன்னைக் காப்பாற்றுவார்” என்று சொன்னான்.