யோபு
16 அதற்கு யோபு,
2 “நான் இதுபோல் எவ்வளவோ கேட்டிருக்கிறேன்.
ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக நீங்கள் எல்லாரும் என் மனதை நோகடிக்கிறீர்களே.+
3 அர்த்தமில்லாத பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை.
என்னிடம் ஏன் இப்படி எரிந்து விழுகிறீர்கள்?
4 எனக்கும் உங்களைப் போலப் பேசத் தெரியும்.
என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்தால்
என்னாலும் உங்களுக்கு எதிராகச் சாமர்த்தியமாய்ப் பேச முடியும்.
கிண்டலாக உங்களைப் பார்த்துத் தலையசைக்க முடியும்.+
5 ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்; உங்களைத் தைரியப்படுத்துவேன்.
ஆறுதல் சொல்லி உங்கள் கவலைகளைப் போக்குவேன்.+
8 இப்போதும் அவர் என்னை ஆட்டிப்படைப்பதை மற்றவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்.
தப்பு செய்ததற்குத் தண்டனையாகத்தான் எலும்பும் தோலுமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.
9 கோபத்தில் அவர் என்னை நார்நாராகக் கிழித்துவிட்டார்; என்மேல் வெறியோடு இருக்கிறார்.+
என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறார்.
என் எதிரிகளின் கண்கள் என்னைக் குத்திக் கிழிக்கின்றன.+
10 அவர்கள் என்னைப் பற்றி இல்லாததையெல்லாம் சொல்கிறார்கள்.+
கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்துகிறார்கள்.
எனக்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே திரண்டிருக்கிறது.+
12 கவலையில்லாமல் இருந்த என்னை நொறுக்கினார்.+
கழுத்தைப் பிடித்துத் தள்ளி என்னை மிதித்தார்.
என்னைத் தாக்குவதிலேயே குறியாக இருந்தார்.
13 அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.+
அவர் ஈவிரக்கமே இல்லாமல் அம்புகளால் என்னை ஆழமாக* துளைக்கிறார்.+
என் பித்தநீரைத் தரையில் ஊற்றுகிறார்.
14 மதிலைத் துளைப்பதுபோல் என்னை மாறிமாறி துளைக்கிறார்.
போர்வீரனைப் போல் என்மேல் பாய்கிறார்.
15 நான் போட்டுக்கொள்வதற்குத் துக்கத் துணியை* தைத்தேன்.+
என் மானம் மரியாதையைக் குழிதோண்டிப் புதைத்தேன்.+
16 அழுது அழுது என் முகம் சிவந்துவிட்டது.+
கண்ணீர் சிந்தி சிந்தி என் கண்கள் வீங்கிவிட்டன.*
17 இத்தனைக்கும், நான் வன்முறையில் இறங்கியதே இல்லை.
சுத்தமான மனதோடுதான் ஜெபம் செய்கிறேன்.
18 மண்ணே, என் இரத்தத்தை மூடி மறைக்காதே!+
அது எனக்காக ஓயாமல் கதறட்டும்!
19 இதோ, எனக்குச் சாட்சி சொல்பவர் பரலோகத்தில் இருக்கிறார்.
எனக்காக வாதாடுபவர் மேலே இருக்கிறார்.