உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • T-33 பக். 1-4
  • இந்த உலகம் யார் கையில்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இந்த உலகம் யார் கையில்?
  • இந்த உலகம் யார் கையில்?
  • இதே தகவல்
  • எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  • கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?
    கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?
  • இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?
    இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?
  • கஷ்டங்களுக்கு முடிவு வருமா?
    கஷ்டங்களுக்கு முடிவு வருமா?
மேலும் பார்க்க
இந்த உலகம் யார் கையில்?
T-33 பக். 1-4

இந்த உலகம் யார் கையில்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . .

  • கடவுள் கையிலா?

  • மனிதர் கையிலா?

  • வேறொருவர் கையிலா?

கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.”—1 யோவான் 5:19. “பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.”—1 யோவான் 3:8, புதிய உலக மொழிபெயர்ப்பு.

இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

உலகப் பிரச்சினைகளுக்குச் சரியான காரணத்தைத் தெரிந்துகொள்வீர்கள்.—வெளிப்படுத்துதல் 12:12.

உலக நிலைமைகள் நிச்சயம் மாறுமென நம்புவீர்கள்.—1 யோவான் 2:17.

உலக அரசியல், ராணுவம், மதங்கள், மக்கள் எல்லாவற்றையும் சாத்தான் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான்

கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?

நிச்சயம் நம்பலாம். மூன்று காரணங்களுக்காக:

  • சாத்தானுடைய ஆட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது. சாத்தானுடைய ஆட்சிக்கு யெகோவா (கடவுளுடைய பெயர்) நிச்சயம் முடிவுகட்டுவார். ‘பிசாசை அழிக்கப்போவதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார். அவனால் உண்டான எல்லா பாதிப்புகளையும் சரிசெய்வார்.—எபிரெயர் 2:14.

  • உலகை ஆள இயேசு கிறிஸ்துவை கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். சுயநலவாதியாகவும் கொடுமைக்காரனாகவும் இருக்கிற சாத்தானைப்போல இயேசு இருக்க மாட்டார். அவர் எப்படி ஆட்சி செய்வார் என்று யெகோவா கொடுத்த வாக்கைக் கவனியுங்கள்: “ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். . . . கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:13, 14.

  • கடவுள் பொய் சொல்ல மாட்டார். ‘கடவுளால் பொய் சொல்லவே முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 6:18) அதனால், கொடுத்த வாக்கை யெகோவா நிச்சயம் நிறைவேற்றுவார். (ஏசாயா 55:10, 11) “இந்த உலகத்தை ஆளுகிறவன் வீழ்த்தப்படுவான்” என்ற வாக்கும் நிச்சயம் நிறைவேறும்.—யோவான் 12:31.

சிந்தித்துப் பாருங்கள்

ஒரு குடும்பம் சந்தோஷமாக நேரம் செலவிடுகிறார்கள்

சாத்தானுடைய ஆட்சி ஒழிந்த பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும்?

பைபிளின் பதில்: சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:3, 4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்