பொருளடக்கம்
அக்டோபர் 29, 2018–நவம்பர் 4, 2018
3 “இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்”
நமக்கிருக்கும் அறிவைப் பயன்படுத்தினால்தான் அது நமக்குப் பிரயோஜனத்தைத் தரும். அதேசமயத்தில், கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்க நமக்கு மனத்தாழ்மை தேவை. வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்களிடம் சாட்சி கொடுத்த... மற்றவர்களுக்காக ஜெபம் செய்த... யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருந்த... பைபிள் உதாரணங்களை நாம் எப்படி மனத்தாழ்மையோடு பின்பற்றலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
8 வயதான கிறிஸ்தவர்களே... உங்கள் உண்மைத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறார்
நவம்பர் 5-11, 2018
12 தொடர்ந்து அன்பு காட்டுங்கள்—அது மற்றவர்களைப் பலப்படுத்தும்!
கஷ்டமான ஒரு காலத்தில் வாழ்வதால் நாம் அடிக்கடி நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய்விடுகிறோம். ஆனால், யெகோவாவும் இயேசுவும் நமக்கு உதவுவார்கள். அதேசமயத்தில், ஒருவரை ஒருவர் ஆறுதல்படுத்தும் கடமை நமக்கும் இருக்கிறது. நாம் எப்படி மற்றவர்களைப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
நவம்பர் 12-18, 2018
17 ‘சந்தோஷமுள்ள கடவுளை’ வணங்கும் மக்கள் சந்தோஷமானவர்கள்!
சந்தோஷமுள்ள கடவுளான யெகோவா, தன்னுடைய ஊழியர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். சாத்தானுடைய உலகத்தில் நமக்கு வரும் சோதனைகள் மற்றும் துன்பங்களின் மத்தியிலும் எப்படி சந்தோஷமாக இருப்பது? நிலையான சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுகிற சில நடைமுறையான ஆலோசனைகளை, இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் சொன்னார்.
22 பைபிள் காலங்களில் நேரத்தை எப்படிக் கணக்கிட்டார்கள்?
நவம்பர் 19-25, 2018
23 சர்வ வல்லவர், இருந்தாலும் கரிசனையுள்ளவர்!
நவம்பர் 26, 2018–டிசம்பர் 2, 2018
28 யெகோவாவைப் போலவே கரிசனையையும் கருணையையும் காட்டுங்கள்
இன்று, சுயநலமான மனப்பான்மை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் மற்றவர்கள்மேல் சுயநலமற்ற அன்பைக் காட்டுகிறார்கள். அப்படி அன்பு காட்டுவதற்கான ஒரு வழி, மற்றவர்களைக் கரிசனையோடு நடத்துவது! யெகோவா எப்படிக் கரிசனை காட்டியிருக்கிறார் என்றும், அவரைப் போலவே நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்றும் இந்தக் கட்டுரைகளில் பார்ப்போம்.