“நமக்காக எவன் போவான்?”
யெகோவா இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏசாயா உடனடியாக இவ்வாறு பதிலளித்தார்: “இதோ, அடியேன் என்னை அனுப்பும்.” (ஏசா. 6:8, கத்.பை) இன்றைக்கு அறுவடை மிகுதியாய் இருப்பதால், அதே அழைப்பு இப்பொழுதும் விடுக்கப்படுகிறது. முழுநேர ஊழியர்கள்—ஒழுங்கான பயனியர்கள்—அதிக எண்ணிக்கையில் அவசரமாய் தேவைப்படுகிறார்கள்! (மத். 9:37) நீங்கள் முன்வர விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? அப்படியானால், செப்டம்பர் 1-ல் துவங்கவிருக்கும் 1998-ம் ஊழிய ஆண்டில் ஒரு பயனியராக சேர்ந்துகொள்வதற்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும். ஒரு விண்ணப்ப படிவத்திற்காக நீங்கள் ஏன் மூப்பர்களைக் கேட்கக்கூடாது?