அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு செப்டம்பர், அக்டோபர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். நவம்பர், டிசம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? அல்லது கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுங்கள்.
◼ 2015-ல் இயேசுவின் மரண நினைவுநாள் சமயத்தில், விசேஷ பொது பேச்சு ஏப்ரல் 6-ல் துவங்கும் வாரத்தில் கொடுக்கப்படும். பேச்சின் தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். அந்த வாரத்தில், மாநாடோ வட்டாரக் கண்காணியின் சந்திப்போ இருந்தால் விசேஷ பேச்சு அதற்கு அடுத்த வாரம் கொடுக்கப்படும். ஏப்ரல் 6-க்கு முன்பு இந்த விசேஷ பேச்சைக் கொடுக்க கூடாது.
◼ செப்டம்பர் முதல், வட்டார கண்காணிகள் கொடுக்கும் பொது பேச்சின் தலைப்பு “தெய்வீக ஞானம் நமக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது.”
◼ ஒழுங்கான பயனியர்களின் சேவையை சபையின் செயலரும் ஊழியக் கண்காணியும் மறுபார்வை செய்ய வேண்டும். யாருக்காவது மணிநேரங்களை எட்டுவது கஷ்டமாக இருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
◼ மீண்டும் சபைக்குள் வர விரும்பும் சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது சபையிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டவர்களைப் பற்றி பிப்ரவரி 1, 1992 காவற்கோபுரம் பக்கங்கள் 19-22-ல் இருக்கின்றன. இதில் உள்ளபடி செய்ய மூப்பர்களுக்கு நினைப்பூட்டப்படுகிறது.